Golden Jubilee Celebrations - Celebrating 50 Years

The College – A Portrayal

Government Polytechnic College for Women (GPCW) functions under the authority of Directorate of Technical Education, Government of Tamil Nadu and affiliated to AICTE.

Established in the year 1964 with just 40 students in two courses viz. Diploma in Civil Engineering and National Diploma in Commercial Practice, this college now in its 50th year of existence, stands tall as a prestigious institution with 7 branches of study with over 1200 students.

Located in the heart of the city in a sprawling 10 acre campus amidst green environ, our college is a big attraction to women from both urban and rural areas. Catering to the needs of women, especially the downtrodden, it quenches their thirst for technical and commercial skills and know-how.

In its giant strides during its history of five decades, it has grown in leaps and bounds taking along the society, especially the women, empowering them technically, making them economically independent to be viable and equal partners to men both in family and profession. Through devoted service the institution not only provides students with opportunities to develop skills but also develop the right attitudes to function successfully in the ever competing world.

By the concerted efforts of the past and present faculty, the institution today stands as a pioneering and prestigious institution echoing the voice of women in the Kongu region.

Tuesday 4 February 2014

பொன் விழா ஆண்டு 2014

அரசு மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, கோவை 641044
பொன் விழா ஆண்டு 2014
     அரசு மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி 1964ம் ஆண்டு, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் மகளிரின் முன்னேற்றத்திற்காக  கோவை, அரசு பொறியியற் கல்லூரி வளாகத்தில் அமைப்பியல் பட்டயப்படிப்பு மற்றும் தேசிய வணிகவியல் பட்டயப்படிப்பு ஆகிய இரு துறைகளுடன் துவக்கப்பட்டது. பின்னர் 1969ம் ஆண்டு 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட தற்போதய வளாகத்திற்க்கு மாற்றப்பட்டது.
      அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று தற்சமயம் முதல் ஆண்டில் 380 மாணவியர் மற்றும் நேரடியாக  இரண்டாம் ஆண்டில் 76 மாணவியரும் சேர்க்கப்படுகின்றனர். இதன்படி மொத்தம் 1292 மாணவியர் தற்போது பயன்பெற்று வருகின்றனர். மேலும் மத்திய  அரசின் மனித வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  மாற்றுத் திறனாளிகளும் மூன்றாண்டு பட்டயப்படிப்பில் சேர்க்கப்படுகின்றனர். இக்கல்லூரியில் தற்போது கீழ்க்காணும் ஏழு பட்டயப் பிரிவுகள் உள்ளன.
1.   அமைப்பியல்
2.   இயந்திரவியல்
3.   மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்
4.   கருவியியல் மற்றும் கட்டுப்பாடு
5.   கணிணி
6.   ஆடைத் தொழில் நுட்பம்
7.   மாடர்ன் ஆபீஸ் பிராக்டிஸ்
       இப்பயிலகத்தில் பயின்ற  முன்னாள் மாணவிகள் பலர் மத்திய அரசு மற்றும் மாநில அரசுப் பணிகளில் மிகப்பெரிய அளவில் பணி புரிந்து இப்பயிலகத்திற்க்கு மென்மேலும் சிறப்பு சேர்த்து வருகின்றனர்.
      இக்கல்லூரியில் பயின்ற மாணவி ஒருவர் இதே தொழில் நுட்பக் கல்வித்துறையில் பணியில் சேர்ந்து, இக்கல்லூரி முதல்வராகவும் பதவி உயர்வு பெற்று பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார் என்பது  மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது.
      மேலும் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களின் உதவியுடன்  இப் பயிலகத்தில் கீழ்க்காணும் திட்டங்கள்  சமுதாய முன்னேற்றத்திற்காகவும் நாட்டு வளர்ச்சிக்காகவும் நடத்தப்பட்டு வருகிறது.  
  • பாலிடெக்னிக் வாயிலாக சமுதாய மேம்பாட்டுத் திட்டம்
  • கனடா இந்தியா கூட்டுறவு திட்டம்
  • மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டம்
      இத்திட்டங்களில் பயின்ற பல மாணவியர் சுய தொழில் துவங்கி மிகச்சிறந்த முறையில் வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டுள்ளார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 
      இக்கல்லூரி துவங்கி 50 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இப்பயிலகத்தில் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சிகள் 2014ம் ஆண்டில் தொடர்ச்சியாக வடிவமைக்கப்பட்டு, பல்வேறு போட்டிகளும், நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
      இதன் ஒரு பகுதியாக 04-02-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலை  ”மகளிர் உரிமைகளும்  பிரச்சனைகளும்” ( Women Rights and Issues ) என்ற தலைப்பின் கீழ் மக்கள் விழிப்புணர்வுப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   இப்பேரணி பயிலகத்திலிருந்து துவங்கி வ.உ.சி.பூங்கா வரை சென்று முடிவடையவுள்ளது, இப்பேரணியில், இக்கல்லூரியில் பயின்று தற்போது பல்வேறு துறைகளில் முன்னணியில் பணியாற்றிவரும் முன்னாள் மாணவிகள் பலரும் பங்கேற்க உள்ளார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
      மேலும் இக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவியர்கள் இந்த பொன் விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடும் வண்ணம் இக்கல்லூரி முதல்வரை தொடர்பு கொள்ளவும் இச்சிறப்பான தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.


                                                 அ.கெளசியா ஜபீன்

                                                    முதல்வர்.

No comments:

Post a Comment